ஹரியாணா மாநிலம், பரிதாபாத் மாவட்டம், பல்லாப்கரையை அடுத்த சன்பெட் கிராமத்தில் ஜிதேந்தர் என்ற தலித் குடும்பத்தைச் சேர்ந்த வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். உயர் வகுப்பைச் சேர்ந்த சிலர் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இதில் அவரது இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானது. இந்த கொடூர சம்பவத்தில், அவரும், அவரது மனைவியும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.