2ஜி வழக்கில் பிரதமர் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும்: அன்னா ஹசாரே

செவ்வாய், 4 அக்டோபர் 2011 (13:06 IST)
2ஜி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2ஜி வழக்கை பிரதமர் எதிர்கொள்ள வேண்டும்.இதில் அவரது பெயரும் வெளிவந்துள்ளதால் அக்னி பரீட்சையை அவர் எதிர்கொள்ள் வேண்டும்.அவர் தூய்மையானவராக வெளிவந்தால், அது நல்லதை மட்டுமே செய்யும்.எனவே அத்தகைய ஒரு விடயத்திற்கு ஒருவர் ஏன் அச்சப்பட வேண்டும்?

மன்மோகன் சிங் தூய்மையானவராக இல்லை என்றால் என்ன பயன்? அவர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறார் என்றே சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்