2ஜி தீர்ப்புக்கு தேஜகூ, ஆ.ராசாதான் காரணம்: கபில் சிபல்

வியாழன், 2 பிப்ரவரி 2012 (15:31 IST)
2008 ஆ‌ம் ஆ‌ண்டு பெ‌ற‌ப்ப‌ட்ட 2‌ஜி அலை‌க்க‌ற்றை‌க்கான 122 உ‌ரிம‌த்தை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்து அளித்த தீர்ப்புக்கு முந்தைய தே.ஜ. கூட்டணி அரசும், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும்தான் காரணம் என்று மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தாம் வரவேற்பதாக கூறினார்.

மேலும் உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பு, அலைக்கற்றைகளை இனிமேல் ஏலம் விடலாம் என்ற தெளிவான நிலையை கொண்டுவந்துள்ளது என்றும் சிபல் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்