2ஜி ஊழல்:'ஐடியா' தலைவரிடம் சிபிஐ விசாரணை

புதன், 2 மார்ச் 2011 (18:36 IST)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 'ஐடியா' செல்லுலார் தொலைபேசி நிறுவன தலைமை செயல்அதிகாரி சஞ்சீவ் அகாவிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான இந்நிறுவனத்திற்கு 2ஜி ஸ்பெஜ்க்ட்ரம் முறைகேடாக ஒதுக்கப்பட்டதில், அரசுக்கு சுமார் 684 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2ஜி முறைகேடு குறித்து விசாரித்து வரும் சிபிஐ, இன்று சஞ்சீவ் அகாவை இன்று டெல்லி அலுவலகத்திற்கு வரவழைத்து, விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்