2ஜி ஒதுக்கீடு - அமைச்சரவை முடிவை சிதம்பரத்தால் மாற்றியிருக்க முடியாது: குர்ஷித்
ஞாயிறு, 2 அக்டோபர் 2011 (16:02 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அமைச்சரவை எடுத்த முடிவை சிதம்பரத்தால் மாற்றியிருக்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2ஜி குறிப்பு சர்ச்சை தொடர்பாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கருத்து வேறுபாடு இருந்தது என்றார்.
இந்த விவகாரத்தில் அமைச்சரவை எடுத்த முடிவை சிதம்பரத்தால் தனியாக மாற்றியிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அமைச்சரவை முடிவெடுத்த பின்னரும் ஏலமுறைதான் வேண்டும் என்று வலியுறுத்தியவர் சிதம்பரம் என்று கூறிய குர்ஷித், அமைச்சரவை முடிவு என்பதால் சிதம்பரத்தால் தனியாக அதை மாற்றியிருக்க முடியாது என்றார்.