பத்தினம்திட்டா கரிமுகம் பகுதியில் வசித்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அனார்உசேன், சாகுல் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டருகே நடந்து சென்ற 17 வயது இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தியுள்ளனர்.
ஏற்கனவே கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா பலாத்கார கொலை வழக்கிலும் அஸ்ஸாம் மாநில வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரளாவில் கட்டட வேலை உள்ளிட்ட பல வேலைகளுக்கு வந்துள்ள வெளிமாநில இளைஞர்கள் அங்கு பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.