17 வயது இளம்பெண் தொடர் பலாத்காரம்: இளைஞர்கள் கைது

திங்கள், 27 ஜூன் 2016 (08:38 IST)
கேரளாவில் 17 வயது இளம் பெண் ஒருவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இருவரால் கடத்தப்பட்டு தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
பத்தினம்திட்டா கரிமுகம் பகுதியில் வசித்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அனார்உசேன், சாகுல் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டருகே நடந்து சென்ற 17 வயது இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தியுள்ளனர்.
 
கடத்திய இளம்பெண்ணை அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் அடைத்து வைத்து தொடர் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் வாலிபர்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையில் புகார் செய்தனர்.
 
இந்த புகாரை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் இளம்பெண்ணை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அந்த 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
 
ஏற்கனவே கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா பலாத்கார கொலை வழக்கிலும் அஸ்ஸாம் மாநில வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரளாவில் கட்டட வேலை உள்ளிட்ட பல வேலைகளுக்கு வந்துள்ள வெளிமாநில இளைஞர்கள் அங்கு பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்