கடந்த 3 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அதில், மல்யுத்த போட்டிகள் தொடர்பான காட்சிகள் காண்பிக்கப்பட்டன. அதேபோல் மாணவர்களும் சக நண்பர்களிடம் குத்து சண்டையில் ஈடுபட்டனர். அதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மாணவன் ஒரு விபத்தில் பலியாகி விட்டதாக மாணவனின் தந்தைக்கு பொய்யான தகவலை அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இறந்த மாணவனின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.