நாடாளுமன்ற தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மகராஷ்டிரா, ஓடிஸா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் , மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தொடங்கியது
இதில் மதியம் 2.45 மணி வரை பீகாரில் 33.41 சதவீத வாக்குகளும், மத்திய பிரதேசத்தில் 40 சதவீத வாக்குகளும், ராஜஸ்தானில் மதியம் 2 மணி வரை 37.46 சதவீத வாக்குகளும், ஒடிஸாவில் 44 சதவீத வாக்குகளும், மதியம் 1 மணி வரை ஜார்கண்டில் 41 சதவீத வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 60 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
நக்சல்கள் ஆதிக்கம் உள்ள பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.