ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமணையில் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த பிறந்து பத்தே நாளான குழந்தை எலி கடித்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் முகம் மற்றும் உடல் பகுதியில் எலி கடித்த காயங்கள் காணப்பட்டன. ஆந்திரப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே ஸ்ரீனிவாஸ் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவமனையிடம் அறிக்கை கேட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வேணுகோபால் கூறினார்.