இந்த கிராமத்தில் ஜோகெலும் தாயெங், அவரது மனைவி சோகேலா என இருவர் மட்டுமே வசித்து வருகின்றனர். எனினும், இந்த கிராமத்தில் ஓட்டுப் பதிவுக்காக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.
இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சந்திர பூஷன் குமார் கூறுகையில், ‘மலோகயானில் வாக்குப்பதிவு செய்வதற்காக போலீஸ்காரர்கள் உள்பட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 10 பேரும், 10 சுமையாளர்களும் வாக்குபதிவு எந்திரங்களை எடுத்துக் கொண்டு இந்த கிராமத்திற்கு நடந்தே சென்றனர்.
இவர்கள் வழியில் இருந்த பல சிறிய நீரோடைகளையும், கரடு முரடான மலைப்பாதைகளையும், அடர்ந்த காடுகளையும் கடந்து 4 மணி நேரத்திற்கு பிறகு மலோகயான் சென்றடைந்தனர்’ என்றார்