ஹைதராபாத் மசூதியில் குண்டு வெடித்தது : 5 பேர் பலி! பலர் படுகாயம்!

ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் உலகப் புகழ்பெற்ற சார்மினார் அருகேயுள்ள பழமை வாய்ந்த மெக்கா மஸ்ஜித் என்ற மசூதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமுற்றனர்!

வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் மசூதியில் திரண்டிருந்த நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. காயமுற்ற அனைவரும் அருகில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர காவல் துறையின் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தால் வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுக்க ஹைதராபாத் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நிலைமையை மிகத் தீவிரமாக கண்காணித்து வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்