ஹைதராபாத்தில் ஊரடங்கு தளர்வு

வியாழன், 1 ஏப்ரல் 2010 (13:51 IST)
கலவரம் பாதித்த பழைய ஹைதராபாத்தின் சில இடங்களில் இன்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

பழைய ஹைதராபாத் நகரில் கடந்த சனிக்கிழமையன்று இரு பிரிவினருக்கு இடையே மூண்ட மதக்கலவரம் பல இடங்களில் வெடித்தது.இதில் 2 பேர் பலியானார்கள்; பலர் காயமடைந்தனர்.

கலவரத்தை தொடர்ந்து நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கடந்த மூன்று தினங்களாக அமலில் உள்ள இந்த ஊரடங்கு, நகரின் ஒன்பது இடங்களில் இன்று காலை 8 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கு தளர்த்தப்பட்டது.

அவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்பட்ட இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை.

மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கடைகள் திறக்கப்பட்டன. மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்து, தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதேப்போன்று நிலைமை சீரடைந்து காணப்பட்டதால், மேலும் 8 காவல் நிலைய சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் முற்பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தளர்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்