ஹரியானா மாநிலத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி 10 மணி வரை சுமார் 10 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்ததாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.
மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுவதாகவும், காலை 10 மணியளவில் 10 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சஜன் சிங் தெரிவித்துள்ளார்.