ஸ்பெக்ட்ரம் முறைகேடு- யாரும் தப்ப முடியாது-சுவாமி

திங்கள், 2 ஏப்ரல் 2012 (11:49 IST)
ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இருந்து யாரும் தப்ப முடியாது என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த முறைகேட்டில் ஆ.ராசாவை போன்று, ப.சிதம்பரத்திற்கும் சமபங்கு இருப்பதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்துவேன் என்றார்.

இந்த வழக்கில் தமக்கு சாதகமான பல சட்ட நுணுக்கங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார். ராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அந்த பாலத்தை இடிக்காமல், மாற்றுப் பாதையில் சேதுசமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்

News Summary: Janatha Party President Subramanian Swamy told repotrers in Chennai that like A.Raja, P.Chidambaram also involved in 2G Spectrum case, I will prove it!

வெப்துனியாவைப் படிக்கவும்