ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஷோபியான் கற்பழிப்பு, கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளைக் கைது செய்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கைது செய்யப்பட்டதற்கு உரிய ஆதாரங்களை மாநில அரசு தாக்கல் செய்யத் தவறி விட்டதாகவும் உச்ச நீதிமன்றம் குறைகூறியுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பிணைய விடுதலை மனுவை விரைந்து விசாரிக்குமாறும் ஷோபியான் செசன்ஸ் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வழக்கு குறித்த ஆவணங்களை திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.