ஷாரூக்கானுக்கு எதிராக வழக்கு

திங்கள், 22 ஜூன் 2009 (11:36 IST)
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக மும்பை பாந்த்ரா காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை ஷாரூக்கான், பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மீது மத உணர்வை தூண்டும் விதத்தில் பேசியதாகக் கூறி, வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் அவரது கருத்துகளை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்