லால்கார் நகரில் பதற்றநிலை தொடர்கிறது: ப.சிதம்பரம்

ஞாயிறு, 21 ஜூன் 2009 (16:41 IST)
மேற்குவங்கத்தின் லால்கார் நகரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வருவதாகவும், அதனால் அங்கு பதற்றநிலை காணப்படுவதாகவும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதற்றம் நிறைந்த பகுதிகளுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், குறிப்பாக அரசியல் தலைவர், அரசு சாரா அமைப்பு பிரதிநிதிகள் அங்கு நுழைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சிதம்பரம் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக மாவோயிஸ்ட் வசமிருந்த லால்கார் காவல்நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் நேற்று கொண்டு வந்த பாதுகாப்பு படையினர், இன்று மேற்கொண்ட நடவடிக்கையால் மேலும் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மேலும் 17 கிராமங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்