ராஜ் தாக்ரேயை பகடைக்காயாய் பயன்படுத்துகிறது காங்கிரஸ் - சரத்யாதவ்
திங்கள், 3 செப்டம்பர் 2012 (09:29 IST)
பா.ஜ.க. - சிவசேனா கூட்டணிக்கு எதிராக செயல்பட மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சியின் தலைவர் ராஜ்தாக்ரேயை காங்கிரஸ் கட்சி பகடைக்காயாக பயன்படுத்துகிறது ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் குற்றம்சாற்றியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அவர், மராத்திய மக்களுக்கு ஆதரவாக பேசும் ராஜ்தாக்ரே சிவசேனா கட்சியின் வாக்குகளை பெறும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவர் அல்ல என்றார்.
ஹிந்தி தொலைகாட்சி நிறுவனங்களை இவ்வாறு குறைகூறுவதன் மூலம், ராஜ்தாக்ரே தனது அரசியல் அறிக்கைகளை ஹிந்தி தொலைக்காட்சி வாயிலாக மக்களை சென்றடையும் முயற்சியை மேற்கொள்கிறார் என்று சரத்யாதவ் கூறினார்.
பீகாரை சேர்ந்தவர்களை மும்பையில் இருந்து விரட்டியடிப்போம் என்று அண்மையில் மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சியின் தலைவர் ராஜ்தாக்ரே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.