லால்கர் பகுதியிலுள்ள நேதாய் கிராமத்தில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக கிராமவாசிகள் சந்தேகப்பட்டனர். பெரும் கும்பலாகச் சென்று அந்த வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அந்த வீட்டினுள்ளிருந்து திடீரென்று கிராமவாசிகளை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது.
இதில் ஒரு பெண் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 20 பேரில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.