இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் எபோலா அறிகுறியுடன் தென்பட்ட ஒரு வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 26 வயது அலிப் தாஸ் என்ற அந்த வாலிபர் சமீபத்தில் லைபீரியா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். எனவே அவருக்கு நோயின் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ராய்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.