முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் தடை

வியாழன், 12 ஜனவரி 2012 (13:26 IST)
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் முஸ்லிம்களுக்கான 4.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம்,உத்தரகாண்ட்,பஞ்சாப்,மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ள நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இருந்து முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக 4.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய ஊழியர் நல துறை அமைச்சகம் கடந்த 22 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.

இதற்கு பா.ஜனதா தரப்பில் கடும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும், முஸ்லிம்களுக்கான 4.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்