மும்பை தாக்குதலில் எனது மகனுக்கு தொடர்பு இல்லை: அபு ஜிண்டாலின் தாயார்

வியாழன், 28 ஜூன் 2012 (15:18 IST)
மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக கூறி தீவிரவாதி அபு ஜிண்டால் சில தினங்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அபு ஜிண்டாலின் தாயான ரீனா பேகம் தனது மகன் தீவிரவாதி இல்லை என்று தெரிவித்தார். மேலும் டி.என்.ஏ சோதனை அவருக்கு மேற்கொள்ளப்படவில்லை என்றும் எனது மகன் சிக்க வைக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக ஜிண்டால் குடும்பத்தினர் அவரை சந்தித்து அடையாளம் காண வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இதற்கு முன் ஜிண்டால் குற்றவாளியாக இருந்தால் நிச்சயம் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்