மாணவி மரணம்: குற்றவாளியின் வீட்டில் வெடிகுண்டு வைத்தவர் கைது

செவ்வாய், 1 ஜனவரி 2013 (12:22 IST)
புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான ராம் சிங்கின் வீட்டில் 37வயதுடைய ராஜேஷ் என்ற வாலிபர் சிறிய வெடிபொருட்களால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லியில் உள்ள ரவிதாஸ் காலனியில் வைத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஏற்கனவே, இவர்கள் ராம்சிங்கின் வீட்டில் வெடிகுண்டு வைப்போம் என்று மிரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்