இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் கூடுதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, மன்மோகன் சிங் பெயரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத் பராஸ்கர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பத் தேவையான முகாந்திரம் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.