புனேவில் குண்டுவெடிப்பு நடத்திய தீவிரவாதியை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புனேவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜுங்குலி மகாராஜ் சாலை, கார்வேர் சவுக்,மெக் டொனால்ட் உணவு விடுதி உள்ளிட்ட நான்கு இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பெரும் நாசம் ஏற்பட்டது.
நான்கு குண்டு வெடிப்புகள் ஸ்தம்பித்த புனே சம்பவத்தில் தொடர்புடைய மூன்று தீவிரவாதிகளை தீவிரவாத தடுப்பு பிரிவினர் டெல்லியில் கடந்த வாரம் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று மேலும் ஒரு தீவிரவாதியை தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் டெல்லியில் கைது செய்துள்ளனர். இவர்கள் இந்தியன் முஜாகுதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.