பிரியங்கா காந்தி அதிகமாக மது குடித்திருப்பார் என்ற சுப்பிரமணியசாமி - ஆத்திரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்

செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (19:56 IST)
பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வருண் காந்தியை பேசுகிறார். அதனால்தான் இதுபோன்ற வார்த்தைகளை வருகின்றன என்று சுப்பிரமணியசாமி பேசியதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் சு.சாமி வீட்டை முற்றுகையிட்டதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
Subramanian Swamy
பிரியங்கா காந்தி மற்றும் வருண் காந்தி இடையே கடந்த ஒரு வாரமாக கருத்து மோதல் வலுத்து வருகிறது. இருவரும் கடும் வார்தைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் முக்கிய தலைவர் சுப்பிரமணியசாமி, பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருப்பார் போலும், அதனால்தான் அவர் இவ்வாறு பேசுகிறார் என்று கூறினார்.
 
இதையறிந்த காங்கிரஸ் கட்சியினர் இன்று டெல்லியில் உள்ள சு.சாமியின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கடும் கோஷமிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த ஆவேச தொண்டர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக சு.சாமி வீட்டின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்