பிரதமராக இல்லாதபோது மன்மோகன் சிங்கை பிடித்திருந்தது : அத்வானி

புதன், 2 நவம்பர் 2011 (19:16 IST)
மன்மோகன் சிங் பிரதமராக இல்லாதிருந்தபோது அவரை தமக்கு பிடித்திருந்ததாக பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பனாஜி நகரில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

மன்மோகன்சிங் பிரதமராக இல்லாதபோதுகூட அவரை எனக்கு பிடித்திருந்தது. பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது நிதி அமைச்சராக மிகவும் திறமையாக பணியாற்றினார் மன்மோகன்சிங்.

அப்போது நாங்கள் அவரிடம் இந்த தைரியத்தை எதிர்பார்க்கவில்லை.

அவரை பலவீனமான பிரதமர் என்று நான் கூறுவது கடுமையான விமர்சனம் ஆகாது என்று அத்வானி மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்