பா.ஜனதா அமளி: மாநிலங்களவை 5 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு

வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (18:26 IST)
பா.ஜனதா உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை வருகிற 5ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

குஜராத் லோக் ஆயுக்தாவுக்கு நியமனம் செய்த நீதிபதியை, அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியின் கருத்தை கேட்காமல் நியமித்ததற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் குஜராத் லோக் ஆயுக்தாவுக்கு நியமனம் செய்த நீதிபதியை திரும்ப பெறக்கோரி மாநிலங்களவையில் பா.ஜனதா கட்சி உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை மதியம் 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியபோதும் அதே நிலை நீடித்ததால், அவை வருகிற 5 ஆம் தேதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்