பாக்.கிற்கு சொல்லும் செய்தியே கஸாப் தீர்ப்பு: ப.சிதம்பரம்

திங்கள், 3 மே 2010 (17:43 IST)
மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கஸாப் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்படும் செய்தியாகும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதல் வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், இவ்வழக்கில் கஸாப் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதும், உள்ளூர்வாசிகள் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளதும் சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் நடைபெறுவதை காட்டுவதாக உள்ளது என்றும், அதே சமயம் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற செய்தியை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

மும்பை தாக்குதல் வழக்கு வெளிப்படையாக, சட்டப்படி நடைபெற்றதாகவும், குற்றம் சாற்றப்பட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக வாதாட முழு வாய்ப்புகளும் அளிக்கப்பட்டதாகவும் சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்