பாஜக பிரதமர் வேட்பாளரும், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் மோதிக்கொள்ளும் வாரணாசி தொகுதியில், இவர்களுக்கு எதிராக திருநங்கை ஒருவர் போட்டியிட தயாராகியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே இரு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள இவர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும், தோல்வியடைந்த பிற கட்சி தலைவர்களுக்கு வளையல்களை அனுப்பிவைக்க போவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.