தேரா சச்சா கிளைகளை மூட வேண்டும்: அகால் தக்த்

சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங் போல ஆடை அணிந்தற்காக தேரா சச்சா சௌதா மதப்பிரிவின் தலைவர் வருத்தம் தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள அகால் தக்த் வரும் 27 ந் தேதிக்குள் தேரா சச்சா சௌதா கிளைகளை மூடிவிட வேண்டும் என்று பஞ்சாப் அரசுக்கு கெடு விதித்துள்ளது.

சீக்கிய மதத்தின் தலைமை அமைப்பான அகால் தக்த் குரு கோவிந்த் சிங்கை போல ஆடை அணிந்து விளம்பரம் செய்தமைக்காக தேரா சச்சா சவுதா தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

தேரா சச்சா சௌதா தலைவரை கண்டித்து நாளை பஞ்சாப்பில் முழு அடைப்பு நடைபெறும் என்று அகால் தக்த் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்