ஆந்திராவில் 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், அவற்றில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை (புதன்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் நேற்று அரசியல் கட்சியினர் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த சந்திரபாபு நாயுடு, தேர்தல் பிரச்சாரத்தை அவசர அவசரமாக முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், டி.ஆர்.எஸ். கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவ் மற்றும் காவல்துறையினர் மீது கடுமையாக குற்றம்சாற்றினார். மேலும், காவல்துறையினர் பாரபட்சமின்றி நடந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.