தெலங்கானா தனி மாநிலம் கூடாது: நடிகர் சிரஞ்சீவி எதிர்ப்பு

சனி, 1 ஜனவரி 2011 (12:44 IST)
தெலங்கானா தனி மாநிலம் அமைக்கக் கூடாது என்று பிரஜ்ஜா ராஜ்யம் கட்சித் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆந்திரா மாநில மக்கள், மாநிலத்தை பிரித்து தெலங்கானா மாநிலம் அமைவதை விரும்பவில்லை. ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம்தான் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நானும் ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்துக்குத்தான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

இந்த கருத்தில் சந்தேகம் இருந்தால், தனித்தெலங்கானா மாநிலம் வேண்டும் என்று போராடும் தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ், ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்தை கேட்டு அறியட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்