தாவூத் இப்ராகிம் சகோதரர் ‌‌மீது து‌ப்பா‌க்‌கி சூடு

புதன், 18 மே 2011 (10:44 IST)
மு‌ம்பை ‌நிழ‌ல் உலக தாதா தாவூத் இப்ராகிம் சகோதரர் நட‌த்த‌ப்ப‌ட்ட து‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் அ‌தி‌ர்‌ஷ்டவசமாக உ‌யி‌ர் த‌ப்‌பினா‌ர்.

தாவூ‌த் சகோதர‌ர் இக்பால் கஸ்கர் (53) தெற்கு மும்பையில் ஜே.ஜே. மரு‌த்துவமனை அருகே வசித்து வந்தார். இவர் நே‌ற்‌றிரவு தன்னுடைய வீட்டிற்கு வெளியில் 2 மெய்காவலர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது இருச‌க்கர வாகன‌த்த‌ி‌ல் அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் இக்பாலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இக்பா‌லி‌ன் மெய்க்காவலர் ஹரீப் ஜவ்லேரி குண்டுபாய்ந்து ‌நிக‌ழ்‌விடத்திலேயே உயிரிழந்தார். இக்பால் நூலிழையில் உயிர் தப்பினார்.

துப்பாக்கியால் சுட்ட மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். எனினும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இரண்டு பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்து பைதோனி காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் ஒப்படைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்