டெல்லி மாணவி சாம்பல் கங்கையில் கரைக்கப்பட்டது

செவ்வாய், 1 ஜனவரி 2013 (17:22 IST)
கற்பழிக்கப்பட்டு பரிதாபமாக உயிரைவிட்ட மாணவி தகனம் செய்யப்பட்ட சாம்பல் பரௌலி கட் பகுதியில் கங்கை நதியில் கரைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்த சாம்பல் கரைக்கப்பட்டது.

13 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி கடைசியில் சிகிச்சை பலனின்றி இறந்த டெல்லி மாணவியின் உடல் அவரது பூர்வீக கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இன்று காலை குடும்பத்தினர் 8 மணிக்கு தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு சாம்பலை கங்கையில் கரைக்கச் சென்றனர்.

மாணவிக்கு தங்களது கடைசி அஞ்சலியைச் செலுத்த கூட்டம் கூடியதால் 8கிமீ தூரத்தை குடும்பத்தினர் கடக்க சுமார் 3 மணி நேரம் ஆகியது.

பெண்ணின் தந்தை, சகோதரன், உள்ளூர் எம்.எல்.ஏ. உபேதிர திவாரி ஆகியோர் சாம்பலைக் கரைக்க உடன் சென்றனர்.

சாம்பலைக் கரைத்தவுடன் மாணவியின் தந்தையும், சகோதரரும் கட்டுப்படுத்த முடியாத துக்கத்தினால் அழுதனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்