சாலைத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: பிரதமர்

திங்கள், 12 செப்டம்பர் 2011 (17:05 IST)
சாலைத் திட்டங்களை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான திட்டங்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் வழங்கப்படுகின்றன என்பது நிரூபிக்கப்படுவது அவசியமான ஒன்றாகும். அவ்வாறு நேர்மையாக வழங்கப்பட்டால்தான் அது யாருக்கும் சாதகமாக வழங்கப்பட்டிருக்கலாமோ என்ற எந்த ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தாது.அல்லாது போனால் அது முதலாளித்துவத்திற்கு ஆதரவானதாக விமர்சிக்கப்படும்

இந்த சாலை அமைக்கும் திட்டங்களெல்லாம் பொதுத் திட்டங்கள் என்பதையும், அதில் பொது நலன்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று மன்மோகன் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்