கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்ட எல்லையான மாஹே அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 5 பேரை அடையாளம் தெரியாத சிலர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.
கிழக்கு பாலூர் என்ற இடத்தில் நேற்றிரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கத்திக்குத்து காயம் அடைந்தவர்களில் 3 பேர் கோழிக்கோடு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். மற்ற இருவரும் தலச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நேரிட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.