கூடங்குளம் போராட்டம்: நிதி ஆதாரங்கள் குடையப்படுகிறது!

புதன், 18 ஜனவரி 2012 (19:44 IST)
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு பக்க பலமாக இருந்து வருவதாகக் கருதப்படும் தொண்டு நிறுவனங்களின் நிதி ஆதாரஙளை மத்திய அரசு குடையத் தொடங்கியுள்ளது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களை வழிநடத்தும் நபர்கள் நடத்திவரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதி ஆதாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக சிறப்பு குழு ஒன்று கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்திவருகிறது.

இந்த குழுவின் விசாரணை நாளை முடிவடையும் என கூறப்படுகிறது.இந்த விசாரணை தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள 6 நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்