குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

திங்கள், 1 மார்ச் 2010 (18:07 IST)
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் இது 3.2 ஆகப் பதிவானதாக அந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் நகருக்கு அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருக்கக் கூடும் எனத் தெரிவித்த அதிகாரிகள், கடந்த 2001இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பச்சாவ் அருகே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பாகி விட்டது எனத் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்