கற்பழிப்பு தலைநகரில் பாலியல் வன்கொடுமை எண்ணிக்கை - திடுக்கிடும் தகவல்

புதன், 2 ஜனவரி 2013 (13:28 IST)
டெல்லியில் 2012 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களின் எண்ணிக்கை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கற்பழிப்பு தலைநகர் என அனைவராலும் விமர்சிக்கபட்டுவரும் டெல்லியில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆய்வறிக்கையில் 2012 ஆம் ஆண்டு டெல்லியில் 78 சதவீத பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி வரை டெல்லியில் மட்டும் பெண்களுக்கு எதிராக 661 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்