கறுப்பு பணம்: ஹசன் அலிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

வெள்ளி, 25 மார்ச் 2011 (18:35 IST)
கறுப்பு பண வழக்கில் கைது செய்யப்பட்ட புனே தொழிலதிபர் ஹசன் அலியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏராளமான கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகளால் கைது அண்மையில் கைது செய்யப்பட்ட ஹசன் அலியின் 3 நாள் காவல் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் நேற்று மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரது காவலை இன்று காலை 11 மணி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹசன் அலியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு, அதாவது வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்