கணவனின் சகோதரனால் 3 மாதங்கள் கற்பழிக்கப்பட்ட பெண்!
ஞாயிறு, 3 நவம்பர் 2013 (14:38 IST)
FILE
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு கணவனின் சகோதரர் தன்னை மிரட்டி தகாத பாலுறவு கொண்டதாக டெல்லி/பல்லப்கார் பெண் ஒருவர் திடுக்கிடும் புகாரை போலீசிடம் தெரிவித்துள்ளார்.
கணவன் பெயர் ரவி வர்மா, இவரது அண்ணன் அருண் வர்மா ஆகியோர் மீது கற்பழிப்பு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரிதாபாத், செக்டார் 3-இல் வசித்துவந்த ரவி வர்மா புகார் கொடுத்த இந்தப் பெண்ணை மயக்கி திருமணம் செய்துகோண்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஜூலை 8ஆம் தேதி நடந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதல்
டார்ச்சர் நடந்துள்ளது. திருமணமான இந்தப் பெண் தன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது கணவனின் அண்ணன் அருண் வர்மா அவரது அறைக்குள் அத்து மீறி நுழைந்து வன் பாலுறவு கோண்தாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளத்.
இவர் உடனே அலறியுள்ளார். ஆனால் மாமனார் கிஷன் வர்மாவும் மாமியார் மான்சி வர்மாவும் அறையி வெளிப்புற தாழ்ப்பாளை அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டிக்காத மாமியார் மாமனார் பாதிக்கப்பட்டவரிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண் அந்த பயங்கர வீட்டிலிருந்து தப்பி வந்து தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கணவனும், மச்சினனும் சேர்ந்து தொலைபேசியில் பெண்ணின் குடும்பத்தாரை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.