ஐ.ஐ.எஸ்.டி புதிய கட்டிடம்: பிரதமர் 25ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (11:46 IST)
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே வலியமலை என்ற இடத்தில் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கட்டிடத்தை வரும் 25ஆம் தேதி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார்.

திருவனந்தபுரத்திற்கு வருகை தராமலேயே புதுடெல்லியில் இருந்தவாறே வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர், இதனைத் தொடங்கி வைக்கவிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில், ஆய்வகங்கள், வகுப்பறைகள், குடியிருப்பு வசதிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

கடந்த 2007ஆம் ஆண்டு செயல்படத்தொடங்கிய இந்தக் கழகம், தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயங்கி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்