ஏ.கே. ஆண்டனிக்கு எதிரான லஞ்சப் புகார் மனு தள்ளுபடி

திங்கள், 4 ஜனவரி 2010 (15:54 IST)
பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினராயி விஜயன் தொடர்ந்த லஞ்ச ஊழல் புகார் தொடர்பான மனுவை கொச்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

விஜயனுக்கு எதிராக 100 கோடி ரூபாய் அளவு முறைகேடு செய்ததாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் கேரள முதல்வரும், தற்போதைய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. ஆண்டனியையும் விசாரிக்க வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் புகார் கூறியிருந்தார்.

அவரது மனுவை நிராகரித்த சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி கே.பி. ஜோதிந்திர நாத், நீதிமன்றமன்றம் இந்த வழக்கில் தலையிட முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்