ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அன்னா ஹாசாரே குழுவினர் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 8 வது நாளை எட்டியுள்ளது.
டெல்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் 4 ஆவது நாளாக அன்னா ஹசாரேவும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
ஆனால் சமூக ஆர்வலர் குழுவினரின் இந்த காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை.
குறிப்பாக மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பது சமூக ஆர்வலர் குழுவின் புகாராகும்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் ஆகியோரது உடல்நிலை மோசமாகி இருப்பதாக சமூக ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசும் நடவடிக்கை எடுக்காதநிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சமூக ஆர்வலர் குழுவினர் முக்கிய ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரும் போராட்டம் தொடரும் என ஹசாரே உறுதிபட தெரிவித்துள்ளார்.