ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் மலையாள படமான 'ஆதாமின்டே மகன் அபு' என்ற தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டிக்கான படத்தை தேர்வு செய்வதற்காக இந்திய திரைப்பட சம்மேளனம் 14 பேர்களை கொண்ட குழுவை நியமித்தது.
அந்த குழுவைச் சேர்ந்த 16 பேரும் தெய்வ திருமகள், முரண், ஆடுகளம், கோ, எந்திரன் ஆகிய 5 தமிழ் படங்கள் உள்பட 6 மொழிகளைச் சேர்ந்த 16 படங்களை பார்த்தார்கள்.
அதில் ஆதாமின்டே மகன் அபு' என்ற மலையாள படத்தை தேர்வு செய்து ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு அனுப்பிவைத்தார்கள். இந்த தகவலை குழுவின் தலைவர் எடிட்டர் பி.லெனின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.