தான் காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது நாயைக் கண்டதாகவும், அதனை விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைக்க எண்ணியிருந்ததாகவும், தற்போது நாயின் உரிமையாளர் யாரென தெரிந்ததால் அவரிடம் நாயைச் சேர்த்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, வைஷாலி நகர் பகுதியில் கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடாமல் நாயைத் தேடுவதில் தீவிரமாக இருந்தார்கள் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.