இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று இலங்கை செல்கிறார்.
நாளை மாலை கொழும்பு பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில்,அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அப்துல் கலாம் மும்மொழிக் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் அப்துல் கலாம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடமாகாண பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை கலாம் தனது இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.