கடந்த 6 மாதங்களில் அண்ணா ஹசாரே குழுவினர் ரூ 2.94 கோடி நன்கொடை வசூலித்துள்ளனர். அதில் ரூ 1.14 கோடி அண்ணா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த 12 நாட்களில் வசூலிக்கப்பட்டது.
இந்த ரூ 2.94 கோடியில் ரூ 42.55 லட்சத்துக்கு சரியான விவரங்கள் மற்றும் எங்கிருந்து வசூல் செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்கள் முழுமையாக இல்லாததால் அதை திருப்பி அளிக்க அண்ணா ஹசாரே குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.
இறுதியாக அண்ணா ஹசாரே குழுவினரிடம் உள்ள ரூ 2.51 கோடியில் கடந்த 6 மாதங்களில் ரூ 1.5 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
அண்ணா ஹசாரே குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.