அண்ணா ஹசாரே கிராமத்தில் கொண்டாட்டம்

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2011 (15:15 IST)
அண்ணா ஹசாரேவின் போராட்ட வெற்றியை அவரது சொந்த கிராமமான மகாராஷ்டிராவில் உள்ள ராலேகான் சித்தி கொண்டாடி மகிழ்கிறது.

அனைத்து வீடுகளில் வெற்றிக்கொடி பறக்கிறது. அனைவரும் ஹசாரேவின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

யாதவ்பாபா கோயிலுக்கு வெளியே இன்று காலை குழுமிய மக்கள் ஹசாரேவின் வெற்றியை நடனமாடி கொண்டாடினர். இது இந்தியாவில் மட்டுமே முடியும் என்ற பாலிவுட் பாடலுக்கு அவர்கள் நடனமாடினர்.

ஹசாரே 10 அல்லது 12 நாட்களுக்குள் தனது கிராமத்துக்கு திரும்புவார் என அவரது நெருங்கிய உதவியாளர் தத்தா ஆவாரி தெரிவித்தார்.

அவருக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். எங்கள் ஹீரோ அவர். ஹீரோவுக்குரிய வரவேற்பை அவருக்கு கொடுக்க விரும்புகிறோம் என ராலேகான் சித்தி கிராமத்தினர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்